விமானத்தின் கதவை திறக்க முற்பட்ட பயணி!

விமானம் ஒன்று புறப்பட்டு சில நிமிடங்களின் பின்னர் ஓர்லி விமான நிலையத்துக்கு திரும்பி வந்துள்ளது.


விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தின் கதவை திறக்க முற்பட்டதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து TO3010 எனும் விமானம் Marrakech நகர விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. காலை 6:15 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம், அடுத்த 15 ஆவது நிமிடத்தில் அவசரகால இறக்கத்துக்கு உள்ளானது. காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் பயணி ஒருவர் Boeing 737 விமானத்தின் அவசர வெளியேற்ற கதவினை திறக்க முற்பட்டுள்ளார்.

அவர் உடனடியாக விமானத்தில் இருந்த உதவியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டர். பின்னர் விமானம் மீண்டும் ஓர்லி விமான நிலையத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டு, தரையிறக்கப்பட்டது. விமான சேவை நிறுவனம் குறித்த பயணி மீது வழக்கு தொடுத்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.