முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுபடுத்திய திருமலையில் “நந்திக்கடல் பேசுகிறது”ஆவணநூல்!!📷
இன்றைய தினம் தமிழர்களின் தலைநகர் திருக்கோணமலையில் “நந்திக்கடல் பேசுகிறது” ஆவணநூல் சிறப்பான முறையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
புழுதி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையம், அகரம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. இவ்வமைப்புக்களைச் சார்ந்த அத்தனை நண்பர்களுக்கும், நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் பதிப்பகத்தார் சார்பில் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒவ்வொரு இடத்தில் நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமான உணர்வாளர்கள் நிகழ்வுக்கு வருகைதந்து ஆச்சரியமூட்டிவிடுகின்றனர். இன்றும் அதுவேதான் நடந்தது.
அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வின் தலைமையை புழுதி அமைப்பைச் சேர்ந்த திரு.கோபகன் அண்ணன் வழங்கினார். திருமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய அருட்திரு.கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்களுக்கான சிறப்புப் பிரதிவழங்கலுடன் காரண உரைகள் இடம்பெற்றன.
நூல் அறிமுகக் குறிப்பை திரு. அ.ஜெனோஜன் வழங்கினார்.
வண.அருட்தந்தை. எழில்ராஜன் அவர்கள் பின் முள்ளிவாய்க்கால் நினைவுத்திறம் மக்கள் அணிதிரட்டலாக என்ற தலைப்பில் ஆழமான கோட்பாட்டாக்கத்துடன் கூடிய உரையொன்றை நிகழ்த்தினார். அவர் எழுதிய கட்டுரையில், பின் முள்ளிவாய்க்கால் நினைவுத்திறமானது மக்களின் வாழ்வியலோடு கலந்த கலாசாரமாக வளர்த்தெடுக்கப்படவேண்டும் எனக்குறிப்பிட்டிருப்பார். அவ்விடயத்திற்கு உயிர்கொடுப்பத்தைப்போலவே நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நன்கு வனையப்பட்ட சிரட்டைகள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தேசிய கலை இலக்கிய பேரவையைச் சேர்ந்த திரு. மு.மயூரன் அவர்கள் பின் போர்க்கால முற்போக்குத் தமிழ் தேசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ் தேசியம் மதச்சார்பற்றது. ஆனால் அண்மைக்காலமாக அதற்குள் ஊசியேற்றுவதைப்போல மதவாதம் புகுத்தப்படுகிறது என்ற விடயத்தை அழுத்தமாகப் பதிவுசெய்தார்.
நன்றியுரையினை இளைய ஊடகர் கார்த்திஹயன் வழங்கினார்.
இந்த உரையாடல்களுடன் இனிதே நிறைவுற்றது நந்திக்கடல் பேசுகிறது ஆவணநூலின் தலைநகர் அறிமுகநிகழ்வு.
படங்கள் - நண்பர் Karthi Hayan
புழுதி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையம், அகரம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. இவ்வமைப்புக்களைச் சார்ந்த அத்தனை நண்பர்களுக்கும், நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் பதிப்பகத்தார் சார்பில் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒவ்வொரு இடத்தில் நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமான உணர்வாளர்கள் நிகழ்வுக்கு வருகைதந்து ஆச்சரியமூட்டிவிடுகின்றனர். இன்றும் அதுவேதான் நடந்தது.
அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வின் தலைமையை புழுதி அமைப்பைச் சேர்ந்த திரு.கோபகன் அண்ணன் வழங்கினார். திருமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய அருட்திரு.கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்களுக்கான சிறப்புப் பிரதிவழங்கலுடன் காரண உரைகள் இடம்பெற்றன.
நூல் அறிமுகக் குறிப்பை திரு. அ.ஜெனோஜன் வழங்கினார்.
வண.அருட்தந்தை. எழில்ராஜன் அவர்கள் பின் முள்ளிவாய்க்கால் நினைவுத்திறம் மக்கள் அணிதிரட்டலாக என்ற தலைப்பில் ஆழமான கோட்பாட்டாக்கத்துடன் கூடிய உரையொன்றை நிகழ்த்தினார். அவர் எழுதிய கட்டுரையில், பின் முள்ளிவாய்க்கால் நினைவுத்திறமானது மக்களின் வாழ்வியலோடு கலந்த கலாசாரமாக வளர்த்தெடுக்கப்படவேண்டும் எனக்குறிப்பிட்டிருப்பார். அவ்விடயத்திற்கு உயிர்கொடுப்பத்தைப்போலவே நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நன்கு வனையப்பட்ட சிரட்டைகள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தேசிய கலை இலக்கிய பேரவையைச் சேர்ந்த திரு. மு.மயூரன் அவர்கள் பின் போர்க்கால முற்போக்குத் தமிழ் தேசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ் தேசியம் மதச்சார்பற்றது. ஆனால் அண்மைக்காலமாக அதற்குள் ஊசியேற்றுவதைப்போல மதவாதம் புகுத்தப்படுகிறது என்ற விடயத்தை அழுத்தமாகப் பதிவுசெய்தார்.
நன்றியுரையினை இளைய ஊடகர் கார்த்திஹயன் வழங்கினார்.
இந்த உரையாடல்களுடன் இனிதே நிறைவுற்றது நந்திக்கடல் பேசுகிறது ஆவணநூலின் தலைநகர் அறிமுகநிகழ்வு.
படங்கள் - நண்பர் Karthi Hayan
கருத்துகள் இல்லை