ஜப்பானிற்கு விஜயம் செய்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு விஜயம் செய்யவுள்ளார்.


இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி ஜப்பானிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜப்பான் பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளும் வகையிலேயே ஜனாதிபதி ஜப்பானிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரரசர் நருஹிடோ, பேரரசி மசாகோவுடன் பாராம்பரிய உடை அணிந்து இம்பிரியெல் மாளிகையின் பிரதான மண்டபத்திற்கு வருகை தருவதிலிருந்து முடிசூட்டு விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

30 நிமிடங்கள் இடம்பெறும் முடிசூட்டு விழா, பேரரசர் நருஹிடோவின் உரையுடன் நிறைவடையவுள்ளது.

அரச முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து இடம்பெறும் அணிவகுப்பு, அண்மையில் ஜப்பானைத் தாக்கிய ஹகிபிஸ் சூறாவளியினால், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் 126 ஆவது பேரரசராக இளவரசர் நருஹிடோ முடிசூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.