சிரியா நாட்டு தம்பதியினர் கைது!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச் சீட்டைப் போலியாக தயார் செய்து இலங்கைக்குள் பிரவேசிக்க முற்பட்ட சிரியா நாட்டைச் சேர்ந்த தம்பதியொன்று (20) இன்று கைது செய்யப்பட்டதன் பின்னர், அவர்கள் வருகை தந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.


29 வயதுடைய பல் வைத்தியர் ஒருவரும், 28 வயதுடைய அவருடைய மனைவியுமே இவ்வாறு வருகை தந்துள்ளனர். தாம் வருகை தந்ததன் நோக்கம் சுற்றுலாவுக்கு எனத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச் சீட்டைக் கையில் வைத்திருந்துள்ளனர். இவர்களது பொதிகளை சோதனையிட்ட போது அதில் சிரியா நாட்டுக்கான கடவுச் சீட்டுக்கள் காணப்பட்டதாகவும் அவ்வதிகாரி மேலும் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.