குர்திஷ் போராளிகள் துருக்கியின் தாக்குதலுக்கு பதிலடி!!
குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி அரச படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், துருக்கி இராணுவத்தினருக்கு எதிராக சிரியாவின் குர்திஷ் போராளிகள் நடத்திய பதில் தாக்குதலில் துருக்கிய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்திஷ் போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 இலட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
துருக்கியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டின் மீது தடை விதித்து அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, துருக்கியில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்ய துருக்கி தரப்பு ஒப்புக் கொண்டது. எனினும் சிரியாவில் குர்திஷ் மக்களை குறி வைத்து துருக்கிப்படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துருக்கிப்படை தாக்குதல் நடத்திய நிலையில் பதிலுக்கு குர்திஷ் போராளிகளும் பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்த சூழலில் குர்திஷ் படை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்திஷ் போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 இலட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
துருக்கியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டின் மீது தடை விதித்து அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, துருக்கியில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்ய துருக்கி தரப்பு ஒப்புக் கொண்டது. எனினும் சிரியாவில் குர்திஷ் மக்களை குறி வைத்து துருக்கிப்படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துருக்கிப்படை தாக்குதல் நடத்திய நிலையில் பதிலுக்கு குர்திஷ் போராளிகளும் பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்த சூழலில் குர்திஷ் படை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை