மண்சரிவு எச்சரிக்கை 3 மாவட்டங்களுக்கு!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய இரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிவித்திகல – பாரவத்த பிரதேசத்தில் மரமொன்று உந்துருளி மேல் வீழ்ந்ததில், அதில் பயணித்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த தந்தை உயிரிழந்துள்ளதுடன், இரு குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.