மட்டக்களப்பில் படைப்பாளிகளின் புத்தக கண்காட்சி!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு படைப்பாளிகளின் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் ஒக்டோபர் 25, 26ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளன.


மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த இருநாள் கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்ட படைப்பாளியிடமிருந்து அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அறிவுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர சபையின் கீழ் இயங்கிவரும் மட்டக்களப்பு, கல்லடி அரசடி புதூர் அகிய இடங்களிலுள்ள பொது நூலகங்களினால் வினா விடைப்போட்டி, கவிதைப் போட்டி, சித்திரப்போட்டி ஆகிய நிகழ்ச்சிகளும் சிறுவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மேலும் பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த வருட தேசிய வாசிப்பு மாதம், வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.