கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்!!

கோப் குழுவின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளார்.


இது குறித்து பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர மரணமானதை தொடர்ந்து நிலையியல் கட்டளைச்சட்டம் 127(3) கீழ் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி பாரளுமன்றத் தெரிவுக்குழுவின் அடிப்படையில் திலங்க சுமதிபால குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் , திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் அவர்களே திலங்க சுமதிபாலவிற்கு எதிராக கோப் குழுவில் விசாரணை இடம்பெறுகின்றதாகவும், சபாநாயகர் என்ற வகையில் உங்களுக்கு அதிகாரம் உள்ளபோதும், கிரிக்கெட் சபையில் விசாரணை இடம்பெறுகின்றபோது அவரைத் தெரிவுசெய்வது முறையற்ற செயற்பாடு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த விசாரணைகள் நிறைவுறும் வரை அவரை குழுவுக்குத் தெரிவு செய்வதை நிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க எதிர்ப்பு வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.