உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இறுதி அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது!!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை இன்று (23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


குறித்த அறிக்கையை அக்குழுவின் உறுப்பினரான, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவினால் பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் போன்று மீண்டுமொரு சம்பவம் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.

குறித்த அறிக்கை 200 பக்கங்களை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.