யாழில் மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்!!

இந்திய அரசினால் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்கக் கோரி இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடும் கவனயீர்ப்பு போராட்டமொன்று தற்போது யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


வடக்கு மாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஏற்பாட்டில் யாழ். பிரதான வீதியிலுள்ள சமாசத்தின் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அங்கிருந்து பேரணியாக யாழ். மாவட்ட அரச அதிபர் அலுவலகம், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது.


அதனைத் தொடர்ந்து இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.