கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

யாழில்- காங்கேசந்துறையில் கேரள கஞ்சாவை  காரில் கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


மற்றைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சியை சேர்ந்த 36 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

காரில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் காங்கேசந்துறை பொலிஸார் திடீர் வீதிச் சோானை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, தெல்லிப்பழை சந்தியில்  சந்தேகத்திற்கிடமாக வந்த காரை பொலிஸார் சோதனை செய்தபொழுது ஒருவர் தப்பியோடியதுடன் காரில் இருந்த மற்றையவரை இதன்போது கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.