ஒரு தொடு திரை பேசியில் அடங்கிவிட்ட உலகம்.!!

தொழில் நுட்ப வளர்ச்சியின் அசுரவேகம் யாவையும் உள்ளங்கையில் தந்துவிட்டது என்றால் மிகையாகாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை
ஒரு விடுமுறையில் செல்வதாக இருந்தால் பல அடுக்குகள் அதைவிட வீதி வழி காட்டி புத்தகம்
ஒளிப்பட கருவி, பாடல்கள் கேட்பதற்காக மென்தட்டுகள், வங்கி அட்டைகள் என ஏராளமான இத்தியாதிகள்.

இப்போ பயண சிட்டை மாதாந்த நாளாந்த அதைவிட பண பரி மாற்றம் சுங்க சாவடி தானியங்கி அனுமதி, உணவு முற் கூட்டிய பதிவு அதை விட என்ன தேவையோ எல்லாம் ஒரு தொலைபேசியில் வந்து விட்டது.

தகவல் பரிமாற்றமாய் இருந்து இப்போ எல்லாமே தொலைபேசி ஆகிவிட்டது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதாய் உலகம் உள்ளங்கையில்.

சந்திரனில் மனிதன் இறங்கினான் என்பதை நம்பும் நாம் உலகம் ஒரு நாள் அழியும் என்பதையும் நம்பியேதான் ஆகவேண்டும்.

-தம்பி நடன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.