சுர்ஜித் மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் பிரார்த்தனை!

குழந்தை மீட்புப் பணி நடைபெற்று வரும் இடத்தில் நடிகர் தாமு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.


குழந்தையை மீட்கும் பணி, 61 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 40 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மற்றொரு புறம் குழந்தை சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன.

எப்படியாவது குழந்தை சுர்ஜித் ஆரோக்கியமாக மீட்கப்பட வேண்டும் என பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தாமு, குழந்தை மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு இன்று(திங்கட்கிழமை) காலை சென்றார்.

அதன் அருகே ஒரு இடத்தில் அமர்ந்த தாமு, குழந்தைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.