யாழில் கோட்டாவிற்கு ஆதரவான தேர்தல் பிரசார கூட்டம்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) யாழ்ப்பணத்தில் நடைபெறவுள்ளது.


இந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.

யாழ்ப்பாணம் ரக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் நண்பகல் 2 மணிக்கு இந்த தேர்தல் பிரசார கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன.

மேலும் தென்னிலங்கையில் இருந்து இளைஞர்கள் வடக்கிற்கு அழைத்து வரப்பட்டு வாடகை வீடுகளில் தங்கவைக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாது முன்னாள் இராணுவ அதிகாரிகளும் வடக்கில் வாடகை வீடுகளில் தங்கி நின்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.