2ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

இரண்டாம் உலகப்போரின் போது வெடிக்காமல் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை இங்கிலாந்து கடற்படையினர் தற்போது கைப்பற்றி அழித்தனர்.

தென்முனைக் கடல் பகுதியில் சில ஆய்வாளர்கள் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பலை ஆராய்ச்சி செய்த போது, அதில் 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடிக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 நாட்கள் போராட்டத்திற்கு பின் அந்த வெடிகுண்டு மீட்கப்பட்டு சிதைந்த கப்பலுக்கு வெகு தொலைவில் வெடிக்க வைக்கப்பட்டது.

பிரமாண்டமாக வெடித்துச் சிதறிய அந்த வெடிகுண்டு சுமார் 900 கிலோ எடை கொண்டது. விமானத்தில் எடுத்துச் செல்லும் போதோ அல்லது கப்பலில் இருந்து வீசப்பட்ட போதோ அந்த வெடிகுண்டு 17ம் நூற்றாண்டின் கப்பலுக்குள் விழுந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.