புகையிரதம் மோதி மாடுகள் பரிதாப பலி!

தலைமன்னாரிலிருந்து இன்று காலை மதவாச்சியூடாக கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 4 மாடுகள் பரிதபமாக உயிரிழந்துள்ளன.


குறித்த சம்பவம் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி இசைமாளத்தாழ்வு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தலைமன்னார் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணியளவில் குறித்த ரயில் பயணித்துள்ள போதே மன்னார்-மதவாச்சி பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

விபத்தை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்ட புகையிரதம் பின்னர் மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கிசென்றது.

இதேவேளை தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயிலில் தொடர்ச்சியாக மாடுகள் மோதி உயிரிழக்கும் சம்பவம் இடம் பெற்று வருகின்றதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.