முல்லையில் புலிகளின் தொழில்நுட்ப கருவி கண்டுபிடிப்பு!!

விடுதலைப் புலிகளின் ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தனியார் காணி உரிமையாளர் ஒருவர் விவசாய நடவடிக்கைகாக காணி ஒன்றை இன்று (வியாழக்கிழமை) காலை சுத்தம் செய்தபோதே குறித்த கருவி மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட கருவியில் த.வி.பு  055 என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் இதுபோன்ற நீர் எதிர்ப்பு மகெலன் கருவிகள் கடல்வழி பயணங்களின்போது பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் தரை மற்றும் கடல்வழி பயணத்தின்போது மற்றும் ஈரூடாக தாக்குதல் இலக்குகளின் கணிப்பீட்டை பெறுவதற்கும் குறித்த கருவிகளை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பகருவிகளில் ஒன்றே இன்று மீட்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.