உருப்பெறுகிறது -உன்னதர் துயிலும் இடங்கள்!!

கிளிநொச்சி தேராவில் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்விற்கான ஆரம்பக் கட்ட துப்பரவு செய்யும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்விற்கான ஆரம்பக் கட்ட துயிலுமில்லங்களின் துப்பரவு செய்யும் பணிகள் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்றது.

அதன் முதற்கட்டமாக தேராவில் துயிலுமில்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் துப்பரவுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்ந்லையில் எதிர்வரும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் சகலதும் பூர்த்தியாகியுள்ளதாகவும், விரைவில் மாவீரர் பெற்றோர் மற்றும் உறவுகளை ஒருங்கிணைத்து மாபெரும் சிரமதானப் பணி விரைவில் முன்னெடுக்கபடவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை தியிலும் இல்லத்தில் துப்பரவுப் பணியில் ஈடுபட்ட பணிக் குழு உறுப்பினர்களது பெயர் மற்றும் விபரங்களை இராணுவத்தினர் பதிந்ததன் பின்னரே துப்பரவுப் பணிக்கு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிகபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.