புதுவிளாங்குளம் பகுதியில் மர்மமான முறையில் யானையின் சடலம்!

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் யானையின் சடலம் ஒன்றினை அவதானித்த பொதுமக்கள் கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு நேற்றைய தினம் சென்ற பொலிசார் வனயீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்திருந்ததுடன், யானை இறந்தமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.