பேர்ல் சமூக நலன்புரி அமைப்பின் உத்தியோகபூர்வ காரியாலயம் காத்தான்குடியில் திறந்து வைப்பு!

காத்தான்குடியில் பல்வேறுபட்ட சமூக சேவைகளை செய்து வரும் பேர்ல் சமூக நலன்புரி அமைப்பின் உத்தியோகபூர்வ காரியாலயம் காத்தான்குடி பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது காத்தான்குடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் பேர்ல் சமூக நலன்புரி அமைப்பிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க தரம் எட்டு மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.

அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.றஸாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காத்தான்குடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் எம்.றிபாய், எம்.கலீல் மற்றும் முஜீப் ஜுனைட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த காத்தான்குடி பேர்ல் சமூக நலன்புரி அமைப்பின் நடவடிக்கைகள் அமைப்பின் செயலாளர் ஏ.பஸ்மினின் நெறியாள்கையிலும் அமைப்பின் பொருளாளர் எம்.கே.எம்.பரூஸ் மற்றும் உறுப்பினர்களினது பங்குபற்றுதளுடன் மிகச்சிறப்பாக நடைபெற்று வருவதாக அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.றஸாத் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.