இலங்கையில் சர்வதேச சக்திகளுக்கு இடமில்லை!!
இலங்கையின் சுயாதீனத்தில், சர்வதேசம் தலையிடுவதற்கு தனது ஆட்சியில் ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அதேநேரம், ஒற்றையாட்சி முறைமையை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனம் வெளியிடம் நிகழ்வின்போதே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறியுள்ளதாவது, “.இலங்கை என்பது ஒற்றையாட்சி முறைமைக் கொண்ட நாடாகும். இதனை பிரிப்பதற்கு நாம் என்றும் இடமளிக்கப்போவதில்லை.
இந்த சுயாதீன நாட்டில் தலையிடுவதற்கு, நாம் எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும் இடமளிக்கப்போவதில்லை. தேசிய பாதுகாப்பே ஒரு அரசாங்கத்தின் பிரதான கட்டமைப்பாக நாம் கருதுகிறோம்.
இதற்காக அரச பாதுகாப்பு கட்டமைப்பை நாம் மீண்டும் பலப்படுத்துவோம். சட்டம் மற்றும் நீதி என்பது வெறுமனே பேச்சாக மட்டும் இல்லாமல், அதனை நடைமுறைப்படுத்தவும் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
ஒரு நாட்டில் ஒரு சட்டம் மட்டும்தான் நடைமுறையில் இருக்க வேண்டும். இது கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம்வரை சரிசமனாக செயற்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்வகையில், சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுப்போம். இன்று மக்கள் பாரிய வரிச்சுமையில் காணப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் நாம் குறைப்போம்.
வட் வரியை 8 வீதமாக குறைப்போம். வாகனங்களுக்கான பொதுவான ஒரு வரி விதிப்பு மட்டும்தான் செயற்படுத்தப்படும்.
அதேபோல, மாணவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இதன் ஊடாக 5 வருடங்களில் 10 இலட்சம் வேலை வாய்புக்களை வழங்கவே நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.
அத்தோடு, போதைப்பொருள் அற்ற எதிர்க்கால இலங்கையை ஸ்தாபிப்போம் என்பதையும் இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
எமது தலைமையிலான அரசாங்கத்தில் இலஞ்ச- ஊழலுக்கு இடமிருக்காது என்பதையும் கூறிக்கொள்கிறேன். இந்த உறுதி மொழியை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஒற்றையாட்சி முறைமையை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனம் வெளியிடம் நிகழ்வின்போதே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறியுள்ளதாவது, “.இலங்கை என்பது ஒற்றையாட்சி முறைமைக் கொண்ட நாடாகும். இதனை பிரிப்பதற்கு நாம் என்றும் இடமளிக்கப்போவதில்லை.
இந்த சுயாதீன நாட்டில் தலையிடுவதற்கு, நாம் எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும் இடமளிக்கப்போவதில்லை. தேசிய பாதுகாப்பே ஒரு அரசாங்கத்தின் பிரதான கட்டமைப்பாக நாம் கருதுகிறோம்.
இதற்காக அரச பாதுகாப்பு கட்டமைப்பை நாம் மீண்டும் பலப்படுத்துவோம். சட்டம் மற்றும் நீதி என்பது வெறுமனே பேச்சாக மட்டும் இல்லாமல், அதனை நடைமுறைப்படுத்தவும் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
ஒரு நாட்டில் ஒரு சட்டம் மட்டும்தான் நடைமுறையில் இருக்க வேண்டும். இது கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம்வரை சரிசமனாக செயற்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்வகையில், சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுப்போம். இன்று மக்கள் பாரிய வரிச்சுமையில் காணப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் நாம் குறைப்போம்.
வட் வரியை 8 வீதமாக குறைப்போம். வாகனங்களுக்கான பொதுவான ஒரு வரி விதிப்பு மட்டும்தான் செயற்படுத்தப்படும்.
அதேபோல, மாணவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இதன் ஊடாக 5 வருடங்களில் 10 இலட்சம் வேலை வாய்புக்களை வழங்கவே நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.
அத்தோடு, போதைப்பொருள் அற்ற எதிர்க்கால இலங்கையை ஸ்தாபிப்போம் என்பதையும் இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
எமது தலைமையிலான அரசாங்கத்தில் இலஞ்ச- ஊழலுக்கு இடமிருக்காது என்பதையும் கூறிக்கொள்கிறேன். இந்த உறுதி மொழியை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை