ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்து வெளியேறத் தயார் – சிவாஜி!

பௌத்தத்திற்கு முதலிடம் என்ற நிபந்தனையின்றி ஒற்றையாட்சி குறித்து திறந்த மனதோடு பேசுவதாக ஜனாதிபதி வேட்பாளர்கள் கூறினால், ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்தே தான் வெளியேறத் தயார் என்று தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்துவோம், காணி விடுவிப்பு, அரசியல் கைதி விடுதலை காணாமலாக்கப்கட்டோர் விடயத்தில் தீர்வு வழங்குவோம்.

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக பொலிஸ்- காணி அதிகாரங்களை முழுமையாக விடுவிக்க ஜனாதிபதி வேட்பாளர் யாரும் தயாரா? நான் வந்தால் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக  அமுல்படுத்துவேன்.

ஒற்றையாட்சியை பௌத்தத்திற்கு முதலிடம் என்ற நிபந்தனையின்றி திறந்த மனதோடு பேச ஆரம்பிப்போமென கூறுங்கள். அந்த அறிவிப்பு வெளியாகியவுடன் நான் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.