நீண்டதூர விமானப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தது குவாண்டாஸ் விமானம்.!!📷

இந்த குவாண்டாஸ் போயிங் 787 ரக விமானம் கடந்த நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (19) இரவு ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிமை (20) காலை காலை 7.42 உள்ளுர் நேரப்படி அவுஸ்திரேலியாவின் சிட்டி விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 19 மணித்தியாலங்களும் 16 நிமிடங்கள் விமானம் எங்கும் தரையிறக்காது தொடர்ந்து பயணித்துள்ளது.இதில் விமானப் பணிப்பெண்கள் இரு விமானிகள் பொது மக்கள் உட்பட 50 பேர் பயணித்துள்ளனர். பயணத்தூரமாக 16,000 kilometres (9,500 miles) அமைந்துள்ளது.
இது விமானத்துறையில் புதிய வரலாற்றை படைத்துள்ளதுடன் இந்த முயற்சியில் பயணிகளுக்கு தேவையான உணவு, மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது
உலகிலேயே முதல் முறையாக மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள விமான சேவையின்படி பயணிகளின் அனுபவத்தை தொடர்ந்து குவாண்டாஸ் போயிங் 787 விமானங்களின் சேவை 2022 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Qantas flight with 50 people on board took 19 hours and 16 minutes to fly direct from New York to Sydney in the first of three "ultra long-haul" journeys planned by the airline this year. 16,000 kilometres (9,500 miles)
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை