39 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம்!!

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.


எனினும் இது முழுக்க முழுக்க அரசியல் நாடகம், இதனை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் 22 கம்பனிகளும் அறிவிக்குமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

'அனைவரும் ஒன்றாக செல்வோம்' எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக தேர்தல் பிரச்சார கூட்டமொன்று நுவரெலியா வாசிகசாலை மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

39 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் கொடுத்துள்ளமை தொடர்பில் இனவாத கருத்துக்கள் வெளியிடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழும் அரசகரும மொழி என்பதை இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் வாக்குகளும், முஸ்லிம் மக்களின் வாக்குகளும் தங்களுக்கு தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.

இனவாதத்தினை தூண்டி அதில் குளிர்காய்வதற்கு ஒரு கூட்டம் தயாராகி வருகிறது என்பது தெளிவாக அறியக் கூடியதாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.