கடற்கரையில் குப்பை அள்ளிய இந்தியப் பிரதமர்!

சென்ளை - கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் விடுதியில் தங்கியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோளவளம் கடற்கரையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது கடற்கரையில் இருந்த குப்பைகளை தானே அகற்றினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
ஒரு உண்மையான தலைவர் உதாரணத்தின் மூலமே வழிநடத்துவார். சுகாதார சீர்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் முயற்சிக்கு நன்றி என கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.