737 என்.ஜி ரகத்தை சேர்ந்த 50 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தம்!!

737 என்.ஜி ரகத்தை சேர்ந்த 50 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிட்னியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே போயிங் நிறுவன செய்தித் தொடர்பாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இந்தோனேசியா, எத்தியோப்பிய நாடுகளில் போயிங் 737 மேக்ஸ் ரகத்தை சேர்ந்த 2 விமானங்கள் விபத்துக்குள்ளானதில் சுமார் 350 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, தென்கொரியாவில் கொரியன் ஏர் நிறுவனத்தின் 5 விமானங்கள் உள்ளிட்ட 9 போயிங் 737 என்.ஜி. ரக விமானங்கள், விரிசல்கள் ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதேகாரணத்துக்காக, அவுஸ்ரேலியாவின் குவான்டாஸ் நிறுவனமும், தன்னிடமுள்ள போயிங் 737 என்.ஜி. ரக விமானங்களில் ஒன்றை நிறுத்தியது.

இந்தநிலையிலேயே போயிங் நிறுவன செய்தித் தொடர்பாளர் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஆயிரம் போயிங் 737 என்.ஜி. விமானங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 50 விமானங்களில் விரிசல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை நிறுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.