ஆசிரியர்- அதிபர் சங்கம் சிவப்பு எச்சரிக்கை!!
இடைக்கால சம்பள சுற்றறிக்கையை வெளியிடாவிடின் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக ஆசிரியர், அதிபர் சங்கம் கூட்டாக இணைந்து சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதிக்கு முன்பாக குறித்த சுற்றறிக்கையை வெளியிடாவிட்டால், எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சேவா சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டை நீக்குமாறு பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் எந்ததொரு நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை.
இதனால் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதமும் செப்டெம்பர் மாதமும் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
போராட்டத்தின் விளைவாகவே இடைக்காலக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு பல வாரங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை இடைக்கால சம்பள சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை.
எனவேதான், 5ஆம் திகதிக்குள் சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை எனின், 8ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பில் 26 சங்கள் இணைந்துகொள்ள தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதிக்கு முன்பாக குறித்த சுற்றறிக்கையை வெளியிடாவிட்டால், எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சேவா சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டை நீக்குமாறு பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் எந்ததொரு நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை.
இதனால் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதமும் செப்டெம்பர் மாதமும் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
போராட்டத்தின் விளைவாகவே இடைக்காலக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு பல வாரங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை இடைக்கால சம்பள சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை.
எனவேதான், 5ஆம் திகதிக்குள் சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை எனின், 8ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பில் 26 சங்கள் இணைந்துகொள்ள தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை