ஊடக அமையம் மட்டக்களப்பில் திறப்பு!

மட்டக்களப்பு மத்திய பேரூந்து நிலைய கட்டடத்தொகுதியில் மட்டு.ஊடக அமையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பின் ஊடகத்துறை வரலாற்றில் மற்றுமொரு பதிவாக, மட்டு.ஊடக அமையம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந், மட்டக்களப்பு சிவில் அமைப்புக்களின் தலைவர் எஸ்.சிவயோகநாதன், மத்தலைவர்கள், மாவட்ட ஊடகவியலாளர்கள், மும்மதத்தலைவர்கள், பொதுமக்கள்  என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, ஐயாத்துரை நடேசன், தருமரெத்தினம் சிவராம்,  சு.சுகிர்தராஜன், மயில்வாகனம் நிமலராஜன் போன்றோருக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவுகூரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மட்டு.ஊடக அமைய திறப்பு விழா குறித்த நிகழ்வுகள் நடைபெற்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.