வென்னப்புவில் சித்திரவதை முகாம்!

வென்னப்புவ பகுதியில் இரகசிய சித்திரவதைக் கூடமொன்றை நடத்தியதாக கூறப்படும் விடயம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.


பிரதான சந்தேகநபரான ‘ஓலு மார’வின் நண்பர் என்று கூறப்படும் ரன்மா சாமாரவையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமறைவாக உள்ள அந்த கும்பலின் ஏனைய உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

வென்னப்புவவில் இரகசிய சித்திரவதைக்கூடமொன்று இயங்கி வருவதாக இந்த வார ஆரம்பத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

கொலை, போதைவஸ்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத காரியங்களில் ஈடுபடும் குண்டர்களினால் இந்த சித்திரவதைக்கூடம் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

தம்மை விமர்சிப்பவர்கள் மற்றும் கப்பம் பெறுவதற்காக கடத்தப்படுபவர்கள் இந்த இரகசிய சித்திரவதைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்த கும்பலின் தலைவனான ஒலு மாரவை சில தினங்களின் முன்னர் ஹெரோயினுடன் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குறித்த சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது, ஒலுமாரவின் கையடக்க தொலைபேசியை பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன்போது, கையடக்க தொலைபேசியில் இருந்த காணொளிகள் சில பொலிஸாரை அதிர்ச்சியடைய வைத்தன. சிலர் அறையொன்றிற்குள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட காட்சிகளே அதில் இருந்தன.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையிலேயே, சித்திரவதைக் கூடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அந்த காணொளியின் அடிப்படையிலேயே ரன்மா சாமார எனும் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்த குழுவின் மேலும் 7 குண்டர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

ரன் சாமார என்ற நபருக்கு எதிராக ஒரு கொலை, நபர்களைத் தாக்கியமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சிலாபம் மேல் நீதிமன்றம் மற்றும் மராவில நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.