பெண் ஒருவர் உட்பட 5 பேர் கேரளா கஞ்சாவுடன் கைது!!

புத்தளம் பாழவிய பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 06 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை புத்தளம் பாழவிய பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான சில நபர்களை கண்கானித்தனர். அவர்களை மேலும் சோதனை செய்த போது அவர்களிடமிருந்து குறித்த கேரள கஞ்சா பொதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை விற்பனைக்கு தயாராக இருந்தன.

சந்தேகநபர்கள், 23, 30, 35 மற்றும் 38 வயதுடைய, பாழவிய, கந்தான மற்றும் கண்டியில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கண்டரியப்பட்டனர்.

சந்தேகநபர்களுல் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.