வாக்களிக்கும்போது புர்காவை அகற்றுமாறு உத்தரவு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும்போது முஸ்லிம் பெண்கள் புர்கா அல்லது நிகாப்பை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.


வாக்களிக்க வரும்போது புர்கா அல்லது நிகாப் அணியலாம் என தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழையும்போது அவற்றை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புர்கா மற்றும் நிகாப் அணிவதை தங்களால் தடை செய்ய முடியாது என்றும் ஏனெனில் அது அவர்களின் கலாசாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களிடமிருந்து தாங்கள் எதிர்பார்ப்பது, அவர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும் என்பதே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்களிக்கும்போது வாக்களார் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம் என்பதால், அதற்காக, அவர் முகத்தை மறைத்திருக்கும் நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எனினும் மேற்படி நிபந்தனைகளை கருத்திற்கொள்ளாமல் ஒரு வாக்களார் தனது நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்றாது வாக்களிப்பதற்கு, வாக்களிப்பு நிலைய தலைமை அதிகாரி அனுமதி வழங்கக்கூடாது எனவும் சமன் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.