கணவன் குளிப்பதில்லை என யாழில் விவாகரத்து கோரிய மனைவி!

கணவன் குளிப்பதில்லை என கூறி விவாகரத்துக் கோரி மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்.மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன் அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் அவரது கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஒத்துக்கொண்டு வழங்குவதற்கு பதிலி இணைத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது என் யாழ்மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் சுட்டிக்காட்டியதோடு குறித்த மனுவைத் தள்ளுபடி செய்து கட்டளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.