போராட்டத்தை கைவிட்டார் தேரர்!

மிலேனியம் சவால் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுதும்பர காஷ்யப்ப தேரர் ஆரம்பித்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


அவர் அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

எம்சிசி உடன்பாடு நாட்டின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என உடுதும்பர காஷ்யப்ப தேரரில் ஆதரவாளர்கள் அறிக்கை ஒன்றில் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உடன்பாட்டில் கையெழுத்திடப்படாது என இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை அடுத்து, அவர் நேற்றிரவு தமது போராட்டத்தைக் கைவிட்டார்.

அத்துடன், எம்சிசி உடன்பாடு தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாசவும் கோட்டாபய ராஜபக்ஷவும் உடுதும்பர காஷ்யப்ப தேரருக்கு தனித்தனியாக உறுதிமொழிக் கடிதங்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.