கன்சைட் சித்திரவதை முகாம்- உண்மை வெளிவருமா!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில்,
கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கடற்படை முகாமின் கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை முகாம் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை பூரணமாக விஷேட வைத்திய பகுப்பாய்வுக் குழுவினரால் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க சி.ஐ.டி.எனும் குற்றப் புலனயவுப் பிரிவுக்கு நேற்று வழங்கினார்.

அத்துடன் இந்த பகுப்பாய்வு நடவடிக்கைகளின் போது பகுப்பாய்வு வைத்திய குழுவுக்கு மேலதிகமாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் பொலிஸ் ஸ்தல பகுப்பாய்வுப் பிரிவினரும் குறித்த நடவடிக்கைகளின் போது உதவ நீதிவான் அனுமதியளித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.