தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அத்துமீறல்!!

இலங்கை தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வளாகத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர்கள் தங்களது பணிகளைத் தடுத்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு செய்துள்ளது.


குறித்த முறைப்பாட்டினை நேற்று இரவு சினமன்கார்டன் பொலிசில் ஆணைக்குழு முறையிட்டுள்ளது.

இன்று ரூபவாஹினியில் ஒளிபரப்பப்படவிருந்த நிகழ்ச்சியொன்று தேர்தல் விதிமீறலாக அமையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாடொன்றை விசாரிக்க சென்றபோதே, தாம் தடுக்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தொலைக்காட்சியில் நளை ஒளிபரப்பப்படவிருந்த தேர்தல் மீறல் திட்டம் தொடர்பான புகாரைக் கேட்க வந்தபோதே தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதனை எதிர்கொண்டுள்ளனர்.

கோட்டாபயவிற்கு பாதகமான சில விடயங்களை கொண்ட நிகழ்ச்சி அது என ஆணைக்குழுச்விடம் முறையிடப்பட்டிருந்தது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு அந்த நிகழ்ச்சியை பார்வையிட்டு, தனது கையடக்க தொலைபேசியில் அதை பதிவு செய்துகொண்டு அதிகாரியொருவர் தனது காரில் வளாகத்தை விட்டு வெளியேற முற்பட்டபோது, நிறுவன அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களால் அவர்கள் தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் அங்கு சென்றிருந்தார்.

இதேவேளை அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டபோது, அதை ரூபவாஹினி கூட்டுத்தாபன படப்பிடிப்பாளர்கள் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் அந்த காட்சிகளை அழிக்கும்படி தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.