ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு- ஊடகவியலாளர்கள் சந்திப்பு!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் நீண்டகாலக் கண்காணிப்பாளர் பீட்டர் நொவோட்டனி உள்ளிட்ட குழுவினரே இவ்வாறான சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செ.செயலாளர் நிலாந்தன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள், தேர்தல் வன்முறைகள், ஊடகவியலாளர்கள் மீதான அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான கண்காணிப்பு பணியினை மேற்கொண்டவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.