கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையைப் பெற்றுத் தருவோம்!
எழுபத்தைந்து வீதமான சிங்களவர்கள் பெரும்பான்மையாக கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்கப் போகின்றார்கள் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசாரக்கூட்டம் வாழைச்சேனை, மாவடிச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவது உறுதி. அவ்வாறு அவர் வரும் பட்சத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையைப் பெற்றுத் தருவோம். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் போன்று பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினரைத் தீர்மானிக்கும் வேட்பாளராக நான் வரமாட்டேன்.
பாராளுமன்றத் தேர்தலில் ஊருக்கு பாராளுமன்ற உறுப்பினரை நாங்கள் உருவாக்குவோம். ஆனால், இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒட்டு மொத்த சமூகம் என்று சொல்லும் நீங்கள், கல்குடாவுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்குவோம் என்று சொல்ல வேண்டும்.
எங்களுக்கு ஊர், சமூகப்பிரச்சனை இருக்கின்றது. சிங்களவர்கள் 75 வீதம் பெரும்பான்மையாக கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்கப் போகின்றார்கள். அவர்களின் வாக்குகள் அறுபத்தியைந்து இலட்சங்களைத் தாண்டப் போகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றால், முஸ்லிம் சமூகம் எங்கே நிற்கப்போகின்றது. இதனை உணர்ந்து ஒவ்வொரு பிரதேசங்களிலும் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.
கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்களவர் யாரும் முதலமைச்சராக வர முடியுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். ஆனால், மகிந்த அவ்வாறு கூறவில்லை.
முதலில் தமிழன் வந்தால், அடுத்ததாக முஸ்லிம் முதலமைச்சராக வரலாம் என்றுதான் கூறுகின்றார். சிங்களவரை முதலமைச்சராகக் கொண்டு வர வேண்டுமென்று எந்த துவேசப்பேச்சையும் பேசவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷ சிங்களம் என்று துவேசம் பேசுவதாகச் சொல்லுகின்றோம். ஆனால், நாங்கள்தான் துவேசம் பேசுகின்றோம். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டுமென்று நாங்கள் துவேசம் பேசுகின்றோம். இதைப்போல் அவர்கள் பேசினால் நமது நிலைமை என்ன? .
ஒட்டு மொத்த சிங்களவர்களும் ஒன்றாகி விட்டால், நமது நிலைமை என்ன? முஸ்லிம்களுக்காக வேண்டித்தான் கண்டி பெறஹரா உருவாக்கப்பட்டது. நாங்கள் முஸ்லிம்கள் அவர்கள் சிங்களவர்கள் என்ற ரீதியில் போய்க் கொண்டு இருக்கின்றோம். இவ்வாறான பிழைகள் இனி இடம்பெறாக் கூடாது என்றுதான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசாரக்கூட்டம் வாழைச்சேனை, மாவடிச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவது உறுதி. அவ்வாறு அவர் வரும் பட்சத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையைப் பெற்றுத் தருவோம். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் போன்று பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினரைத் தீர்மானிக்கும் வேட்பாளராக நான் வரமாட்டேன்.
பாராளுமன்றத் தேர்தலில் ஊருக்கு பாராளுமன்ற உறுப்பினரை நாங்கள் உருவாக்குவோம். ஆனால், இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒட்டு மொத்த சமூகம் என்று சொல்லும் நீங்கள், கல்குடாவுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்குவோம் என்று சொல்ல வேண்டும்.
எங்களுக்கு ஊர், சமூகப்பிரச்சனை இருக்கின்றது. சிங்களவர்கள் 75 வீதம் பெரும்பான்மையாக கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்கப் போகின்றார்கள். அவர்களின் வாக்குகள் அறுபத்தியைந்து இலட்சங்களைத் தாண்டப் போகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றால், முஸ்லிம் சமூகம் எங்கே நிற்கப்போகின்றது. இதனை உணர்ந்து ஒவ்வொரு பிரதேசங்களிலும் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.
கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்களவர் யாரும் முதலமைச்சராக வர முடியுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். ஆனால், மகிந்த அவ்வாறு கூறவில்லை.
முதலில் தமிழன் வந்தால், அடுத்ததாக முஸ்லிம் முதலமைச்சராக வரலாம் என்றுதான் கூறுகின்றார். சிங்களவரை முதலமைச்சராகக் கொண்டு வர வேண்டுமென்று எந்த துவேசப்பேச்சையும் பேசவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷ சிங்களம் என்று துவேசம் பேசுவதாகச் சொல்லுகின்றோம். ஆனால், நாங்கள்தான் துவேசம் பேசுகின்றோம். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டுமென்று நாங்கள் துவேசம் பேசுகின்றோம். இதைப்போல் அவர்கள் பேசினால் நமது நிலைமை என்ன? .
ஒட்டு மொத்த சிங்களவர்களும் ஒன்றாகி விட்டால், நமது நிலைமை என்ன? முஸ்லிம்களுக்காக வேண்டித்தான் கண்டி பெறஹரா உருவாக்கப்பட்டது. நாங்கள் முஸ்லிம்கள் அவர்கள் சிங்களவர்கள் என்ற ரீதியில் போய்க் கொண்டு இருக்கின்றோம். இவ்வாறான பிழைகள் இனி இடம்பெறாக் கூடாது என்றுதான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை