ஜனாதிபதி தொடர்பில் ஹிருணிகா காட்டம்!

ஜனாதிபதியால் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் எனில் , நாட்டில் எதற்காக நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

றோயல் பார்க் கொலையின் பிரதானக் குற்றவாளிக்கு ஜனாதிபதி அண்மையில், பொது மன்னிப்பு வழங்கியதையிட்டு நாம் மிகவும் கவலையடைவதாக கூறிய அவர்,அது முற்றுமுழுதாக ஜனாதிபதியின் தனிப்பட்ட நோக்கமே அன்றி, அமைச்சரவையினதோ அல்லது அரசாங்கத்தினதோ தீர்மானம் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி பிரசார மேடைகளில் கலந்துகொள்ளாவிட்டாலும், அவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்குத்தான் ஆதரவாக செயற்படுவதாகவும் ஹிருணிகா குற்றம் சுமத்தியுள்ளார்.

இப்படியான ஒருவர் துமிந்த சில்வாவையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய மாட்டார் என்று என்ன நிச்சயம் உள்ளது? எனக்கூறிய அவர், பிறகெதற்கு நீதிமன்றங்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள் எல்லாம் நாட்டில் இருக்க வேண்டும்? எனவும் காட்டமாக கூறியுள்ளார்.

இதேவேளை இன்னும் இரண்டு – மூன்று நாட்களில் நாட்டு மக்கள் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் அனைவரும் சஜித் பிரேமதாசவைதான் விரும்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.