விமானப்படை வீரர்களுக்கு வீர விக்ரம பதக்கம் சூட்டும் விழா!

இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு வீரோதார விபூஷன, வீர விக்ரம விபூஷன, ரண விக்ரம மற்றும் ரண சூர பதக்கம் சூட்டும் விழா முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது.


மூன்று தசாப்த காலமாக இருந்து வந்த கொடூர பயங்கரவாதத்தை மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நிறைவு செய்து தாய் நாட்டிற்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கு உயிரைப் பணையம் வைத்து உன்னத சேவையை செய்த இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு வீரோதார விபூஷன, வீர விக்ரம விபூஷன, ரண விக்ரம மற்றும் ரண சூர பதக்கம் சூட்டும் விழா முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

வீரோதார விபூஷன பதக்கம் 05 பேருக்கும் வீர விக்ரம விபூஷன பதக்கம் 03 பேருக்கும் ரண விக்ரம பதக்கம் 15 பேருக்கும் மற்றும் ரண சூர பதக்கம் 51 பேருக்குமாக மொத்தம் 74 பேருக்கு இதன்போது பதக்கங்கள் சூட்டப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி எட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் உள்ளிட்ட இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.