சிரியா – ரஷ்யா இணைவில் இறுதிகட்ட போர்!!

போர் அபாய பகுதியான இட்லிப்பில் சிரிய இராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கிளர்ச்சியாளர்களிடமிருந்து இட்லிப் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதற்காக அப்பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்த சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு தங்கள் இரண்டாவது தாக்குதலை சிரிய இராணுவம் தொடங்கியுள்ளதுடன் சிரியாவுடன் இணைந்து ரஷ்யப் படைகளும் தாக்குதல் தொடுத்துள்ளன.

இதனிடையே, தாக்குதல் நடத்தப்படுவதைத் தொடர்ந்து இட்லிப் பகுதியில் பொதுமக்கள் முழுவதுமாக வெளியேற வாய்ப்பளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக சிரியா தெரிவித்துள்ளது.

சிரிய அரசுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதில் சிரிய அரசுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரச கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் பகுதியை மீட்க இறுதிச்சண்டை நடந்து வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.