தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.


அழைப்பின் பேரில் நாட்டிற்கு வருகை தந்துள்ள 17 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இதனை தவிர, ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 88 கண்காணிப்பாளர்களும் தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் அமைப்பின் 20 கண்காணிப்பாளர்களும் பொதுநலவாய அமைப்பின் 15 தேர்தல் கண்காணிப்பாளர்களும் சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலய கண்காணிப்பாளர்கள் 45 பேரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமது அமைப்பை சேர்ந்த 3000 பேர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.