இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.


7.1 ரிக்டர் அளவில் நேற்று(வியாழக்கிழமை) இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையினை விடுத்திருந்தது.

எனினும் சிறிது நேரத்திலேயே குறித்த சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சுலாவசி, ஹல்மஹேரா உள்ளிட்ட துறைமுக நகர் பகுதிகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக லெங்கொங் மற்றும் பிட்டுங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ என அழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா இருப்பதனால் தொடர்ச்சியாக நிலநடுக்கத்தாலும், எரிமலை வெடிப்புகளாலும் பாதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.