அமைச்சர் ராஜித்த சேனாரத்தனவிற்கு எதிராக வழக்கு தாக்கல்!

அமைச்சர் ராஜித்த சேனாரத்தனவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கோட்டை நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி ஜனஜித் டி சில்வாவினால் நேற்று(வியாழக்கிழமை) இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார்.

இதில் கடத்தல்களுக்காக வெள்ளை வானை செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவரும், கடத்தலுக்கு உள்ளான ஒருவரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், கடத்தல்களுடன் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாக இருப்பதற்கு உதவியளித்ததாக, அமைச்சர் ராஜித்த மீது குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.