கொழும்பின் போக்குவரத்து சேவை நிலையங்களில் மக்கள் நெரிசல்!

ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்காக பெருந்திரளான மக்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.


இதனால், தற்போது கொழும்பு  கொழும்பு கோட்டை புகையிரத நிலையம், மத்திய பேருந்து நிலையம், பெஸ்டின் மாவத்தை மற்றும் குணசிங்கபுர தனியார் பேருந்து நிலையங்களில் பெருந்திரளான மக்கள் கூடியுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் காரணமாக தனியார் பேருந்துகளின் சேவைகள் குறைந்த அளவில் காணப்படுமென்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 150 பேருந்துகள் இன்றும் நாளையும் மேலதிக சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குறித்த சபையின் தலைமை அதிகாரி நிஹால் நிதெல்லாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ரயில் சேவைகள் வழமைப் போல இயக்கப்படவுள்ளதாக ரயில் கண்காணிப்பாளர் வஜிர பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.