டிக்கோயா வனராஜா பகுதியில் பாரிய மண்சரிவு!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் இன்று மாலை நான்கு மணியளில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் பொருத்தபட்டிருந்த நீர் குழாயில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக குறித்த பகுதியில் உள்ள மண்மேடு தேயிலை மரங்களோடு சரிந்து விழுந்ததில் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்து தடைபட்டு இருந்தாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

குறித்த பகுதியில் சரிந்து விழுந்த மண்மேட்டை அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஈடுபடுத்தபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.