தேர்தல் தொடர்பான அறிவித்தல்!!
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக அனைத்து பணியாளர்களுக்கும் உரிய விடுமுறையை வழங்க வேண்டும் என அரசாங்க மற்றும் தனியார் துறையினருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
வேதன குறைப்பு அல்லது தனியாள் விடுமுறை இரத்துச் செய்யப்படாமல் இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, பணியாளர் ஒருவருக்கு, தமது பணியிடத்திலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவிற்குள் வாக்களிப்பு நிலையம் அமைந்திருக்குமாயின் அவருக்கு அரை நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
40 முதல் 100 கிலோமீற்றர் இடைவெளிக்குள் வாக்களிப்பு நிலையம் அமைந்திருக்குமாயின் ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு நிலையம் 100 முதல் 150 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட தொலைவில் அமைந்திருக்குமாயின், ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கிலோமீற்றருக்கு அதிக தொலைவில் இருக்குமாயின், இரண்டு நாட்கள் விடுமுறையும் வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் வாக்காளர்களுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் வழமைபோல தொடருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினம் கொழும்பு - கோட்டை முதல் பதுளை வரையும், பதுளை முதல் கொழும்பு - கோட்டை வரையும் மேலதிக தொடருந்து ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தொடருந்து போக்குவரத்து அதிகாரி வஜிர பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாக்களிப்புக்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் வாக்காளர்களுக்காக நேற்று முதல் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
கொழும்பிலுந்து தூர பிரதேசங்களுக்காக, வழமையான நேர அட்டவணைக்கு மேலதிகமாக இரண்டு தினங்களிலும் 150 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதான வழிநடத்தல் அதிகாரி நிஹால் ஹிதெல்லன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்றைய தினம் 25 பேருந்துகளும், நாளைய தினம் 120 பேருந்துகளும் மேலதிக சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இலங்கை தனியார் போக்குவரத்து துறையிலும், போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்ஜித் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வேதன குறைப்பு அல்லது தனியாள் விடுமுறை இரத்துச் செய்யப்படாமல் இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, பணியாளர் ஒருவருக்கு, தமது பணியிடத்திலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவிற்குள் வாக்களிப்பு நிலையம் அமைந்திருக்குமாயின் அவருக்கு அரை நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
40 முதல் 100 கிலோமீற்றர் இடைவெளிக்குள் வாக்களிப்பு நிலையம் அமைந்திருக்குமாயின் ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு நிலையம் 100 முதல் 150 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட தொலைவில் அமைந்திருக்குமாயின், ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கிலோமீற்றருக்கு அதிக தொலைவில் இருக்குமாயின், இரண்டு நாட்கள் விடுமுறையும் வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் வாக்காளர்களுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் வழமைபோல தொடருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினம் கொழும்பு - கோட்டை முதல் பதுளை வரையும், பதுளை முதல் கொழும்பு - கோட்டை வரையும் மேலதிக தொடருந்து ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தொடருந்து போக்குவரத்து அதிகாரி வஜிர பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாக்களிப்புக்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் வாக்காளர்களுக்காக நேற்று முதல் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
கொழும்பிலுந்து தூர பிரதேசங்களுக்காக, வழமையான நேர அட்டவணைக்கு மேலதிகமாக இரண்டு தினங்களிலும் 150 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதான வழிநடத்தல் அதிகாரி நிஹால் ஹிதெல்லன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்றைய தினம் 25 பேருந்துகளும், நாளைய தினம் 120 பேருந்துகளும் மேலதிக சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இலங்கை தனியார் போக்குவரத்து துறையிலும், போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்ஜித் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை