எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது தாக்குதல்!


ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்த சென்ற வேளை, இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மு.தம்பிராசா குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.