வடக்கிற்கு வாக்களிக்கச் சென்றவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!!
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்தில் இருந்து வடக்கு மாகாணத்துக்குச் சென்றுள்ள மக்கள் மீண்டும் புத்தளம் நோக்கி பயணிக்கும்போது கடும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, புத்தளம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்தார்.
புத்தளத்தில் இருந்து மன்னாருக்குப் பயணித்த இ.போ.ச.பேருந்து மீது, தந்திரிமலை – ஓயாமடுவ பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள், தனியார் வாகனங்களில் சென்றுள்ள பொதுமக்கள் மீண்டும் புத்தளம் நோக்கி வருகை தருவதற்கு அச்சமடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, குறித்த பொதுமக்களுக்கும் அவர்கள் பயணித்த வாகனங்களுக்கும் அதி உச்ச பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி புத்தளத்தில் இருந்து மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு சென்று மீண்டும் புத்தளம் நோக்கி வருகை தரும் மக்களுக்கு சாலியாவெவ பகுதியில் இருந்து புத்தளம் வரை பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கி, அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
புத்தளத்தில் இருந்து மன்னாருக்குப் பயணித்த இ.போ.ச.பேருந்து மீது, தந்திரிமலை – ஓயாமடுவ பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள், தனியார் வாகனங்களில் சென்றுள்ள பொதுமக்கள் மீண்டும் புத்தளம் நோக்கி வருகை தருவதற்கு அச்சமடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, குறித்த பொதுமக்களுக்கும் அவர்கள் பயணித்த வாகனங்களுக்கும் அதி உச்ச பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி புத்தளத்தில் இருந்து மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு சென்று மீண்டும் புத்தளம் நோக்கி வருகை தரும் மக்களுக்கு சாலியாவெவ பகுதியில் இருந்து புத்தளம் வரை பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கி, அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை