இலங்கையிடம் பாகிஸ்தான் விடுத்துள்ள வேண்டுகோள்!

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச களமிறங்கி வெற்றி பெற்றதற்கு பாகிஸ்தான் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.


குறித்த அறிக்கையில்,

கோத்தபாயவின் தலைமையின்கீழ் இலங்கை சிறந்த எதிர்காலத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் இலங்கை அரசாங்கமும் சுதந்திரமான நியாயமானதுமான தேர்தலை நடத்தியமைக்காக பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க விரும்புவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் ஏற்கனவே வலுவடைந்துள்ள இரு தரப்பு உறவுகளை புதிய ஜனாதிபதி தலைமையிலான குழுவின் கீழ் மேலும் வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் நாட்டு தலைவர் மேலும் எதிர்பார்த்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.