பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய!

இலங்கை ஜனநாயக சேசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


இன்று காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு சென்ற கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன முன்னிலையில் ஜனாதிபதியாக சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்க்ஷ பதவியேப்பு முற்பகல் 11.45 மணிக்கு ஆரம்பமானது. இதனையடுத்து அவர் 11.50 மணிக்கு உறுதியுரை எடுத்துக்கொண்டு கையொப்பமிட்டார்.

நிகழ்வில் பதவியேற்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அத்துடன் மதத் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்பட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

இதேவேளை ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது அவர் அரசியல் தலைவருக்கான பாரம்பரிய வெள்ளை உடையை முதன்முறையாக அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.